எனினும், கடந்தாண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்துள்ளார். தனது பாட்டி பல ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் விவசாய தொழிலை மேற்கொண்டு வருவதை கண்ட முகிலன், அவரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உத்வேகத்துடன், கடந்த முறை செய்த தவறுகளை சரிசெய்துகொண்டு தீவிர பயிற்சி மேற்கொண்டு இந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார். அகில இந்திய அளவில் 404வது இடத்தை பெற்றுள்ள அவர், கடின முயற்சியுடன் பயிற்சி மேற்கொண்டால், குடும்ப பின்னணி ஒரு தடையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
The post திருப்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று சாதனை! appeared first on Dinakaran.