ஸ்ரீவில்லிபுத்தூர் ஆக. 4: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேர் வரும் பாதைகளை டிஐஜி அபிநவ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வருகிற ஆக.14ம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
இந்நிலையில் ஆண்டாள் தேரையும், தேர் வரும் பாதைகளையும் மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார், மாவட்ட எஸ்பி கௌதம் கோயல் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பணியில் வில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம், ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
