விகேபுரம், ஆக.4: பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி தமிழ்த்துறை, மதுரை ஐந்தமிழ் ஆய்வு மன்றம் இணைந்து நடத்தும் 21வது தேசிய கருத்தரங்கம், நூல் வெளியீட்டு விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாளான்று ஐந்தமிழ் ஆய்வு மன்றத்தின் நிகழ்ச்சிக்கு சுந்தரேசன் தலைமை வகித்தார். தலைவர் கருணாகரன் வரவேற்றார். கருத்தரங்கில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், 176 ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வுத்தொகுப்பு நூல்களை வெளியிட்டு, வழங்கிய ஆசி உரையில், \\”தமிழ் இலக்கியங்கள் சமூகத்தில் உயிரினங்களின் அன்பு நிலை வளர்த்தது. அவ்வையார்-அதியமான் நட்பு, கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு, பாரி-கபிலர் நட்பு போற்றினர். பாரி இறந்த பின்னும் கபிலர் பாரியின்மீது வைத்திருந்த நட்பின் இலக்கணமாக பாரியின் புதல்விகளுக்கு அடைக்கலம் தந்தார். பக்திப்பாடல்களில் தமிழ்ப் பண்பாடு வளர்த்தெடுக்கப்பட்ட நிலைகளை மாணவர்கள் ஆராய வேண்டும்’ என்றார்.
முனைவர் சிவசுப்பிரமணியன் ‘நவீனத் தமிழிலக்கியங்களின் போக்கும், நவீன ஆய்வுக்களங்களையும்’ சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ரவிசங்கர், தமிழ்த்துறை தலைவர் பாக்கியமுத்து, ம.தி.தா. இந்துக்கல்லூரி கட்டளை கைலாசம், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஐந்தமிழ் ஆய்வு மன்றம் அமைப்புச் செயலாளர் நாகநந்தினி நன்றி கூறினார். தொடர்ந்து 2வது நாளன்று ஐந்தமிழ் ஆய்வு மன்றம் சார்பில் பேராசிரியர் அறவாணன், பேராசிரியர் அறிவுநம்பி நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. காந்தி கிராம கிராமியப் பல்கலை தமிழ்த்துறையின் பேராசிரியர் கண்ணா கருப்பையா வரவேற்புரை வழங்கினார்.
அறக்கட்டளை நிறுவனர் முருகையனின் நோக்கவுரையாற்றினார். ம.தி.தா. இந்துக்கல்லூரி, வரலாற்றுத்துறை தலைவர் திருநீலகண்டன், நெல்லை எழுச்சியும் வஉசியும் என்ற தலைப்பிலான உரையாற்றினார். திருவள்ளுவர் கல்லூரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ஜெகதீசன் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆய்வாளர்கள் கலந்துகொண்டு 150க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர். ஆய்வுக்கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சான்லாக்ஸ் பன்னாட்டு இதழ் ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு தொகுப்பாகவும், இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. கடையநல்லூரில் உலமாக்கள் ஜமாத் நிர்வாகிகள் கூட்டம் கடையநல்லூர், ஆக.4: தென்காசி மாவட்ட உலமாக்கள் ஜமாத் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
இதில் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். கடையநல்லூர் ஐக்கிய ஜமாத் தலைவர் செய்யது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். கல்லூரி பேராசிரியர் செய்யது இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரியின் முதல்வரும், தென்காசி மாவட்ட அரசு ஹாஜியுமான முஹ்யித்தீன் ஹஜரத் தொகுத்து வழங்கினார். கடையநல்லூர் பேட்டை ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் சாகுல் ஹமீது, முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய துணைத்தலைவர் முகமது அல்அமீன், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி பேசினர்.
தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் ஜமால் முகமது இப்ராஹிம், மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, அயலக அணி மாநில தலைவர் ஹபீபுல்லா, முஸ்லிம் யூத் லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் நயினார் முகமது கடாபி, செய்யது அபுதாஹிர், எஸ்டியு மாவட்ட தலைவர் முகமது இஸ்மாயில், மாவட்ட நிர்வாகிகள் ஹைதர் அலி, முகமது முஸ்தபா, டாக்டர் மீரான் முகைதீன், அப்துல் சமது, நகர நிர்வாகிகள் செய்யது மசூது முஸ்தபா, ஜபருல்லா, அப்துல்ரஹ்மான், முஹம்மது இப்ராஹிம், சாகுல்ஹமீது, பஷீர் அகமது உள்பட பலர் பங்கேற்றனர்.
