ரவுடி மீது குண்டாஸ்

 

வேடசந்தூர், ஆக.3: வேடசந்தூர் சுள்ளெறும்பு நால்ரோடு பகுதியில் கடந்த மாதம் குடிபோதையில் விபத்து ஏற்படுத்தி, கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய திருநெல்வேலியை சேர்ந்த சுந்தர்(36) என்பவரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து அவரின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார், சுந்தரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: