கரூர்: குளித்தலை அருகே புத்தூரில் பாட்டி பாப்பம்மாளை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொன்ற பேத்தி சுகிதா (26) கைது செய்யப்பட்டார். பாட்டி பாப்பம்மாள் வீட்டுக்கு வந்த சுகிதா கல்விச்சான்றிதழ் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். தாயாரின் அனுமதியின்றி சான்றிதழ் வழங்க முடியாது என சுகிதாவின் பாட்டியும் பெரியம்மா மஞ்சுளாவும் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த சுகிதா, பாட்டியையும் , பெரியம்மாவையும் ஸ்குரூ டிரைவரால் குத்தியதில் பாட்டி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மஞ்சுளா திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக இருந்த சுகிதாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
