×

ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு உதவி ஹெச்எம் கைது

சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சராஜா (56). இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலாங்குளம் அரசு உயர்நிலை பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

அதே பள்ளியில் பணியாற்றி வரும் ஒரு ஆசிரியைக்கு, உதவி தலைமை ஆசிரியர் பஞ்சராஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த ஆசிரியை சின்னகோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து உதவி தலைமை ஆசிரியர் பஞ்சராஜாவை நேற்று கைது செய்தனர்.

 

Tags : HM ,Sankarankovil ,Pancharaja ,Gandhinagar ,Tenkasi district ,Periyakovilangulam Government High School ,
× RELATED வத்தலகுண்டுவில் ஓடும் பேருந்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்