×

4 கிராம் கம்மலை காதோடு அறுத்த மகன்: தாய் பலி

 

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கலட்சுமி(80). இவரது மகன் ஏழுமலை (47). லாரி டிரைவர். கடந்த 28ம் தேதி மங்கலட்சுமியை பார்க்க வந்த ஏழுமலை மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, தாய் மங்கலட்சுமி அணிந்திருந்த 4 கிராம் கம்மலை காதோடு அறுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இதில் காது அறுபட்டு ரத்த காயமடைந்த மங்கலட்சுமியை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். வயது முதிர்வு காரணமாக அதிர்ச்சியில் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kammalai ,Vandavasi ,Mangalakshmi ,Pathiri village ,Tiruvannamalai district ,Ezhumalai ,
× RELATED வத்தலகுண்டுவில் ஓடும் பேருந்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்