தலைமை அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் பாட்டில் விற்பனை

தூத்துக்குடி, ஆக. 1: தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் பாட்டில் விற்பனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கங்கை நதி நீரை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த கங்கை நதி நீர் பாட்டில்களின் சிறப்பு விற்பனை தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்று வருகிறது. 250மி.லி அளவு கொண்ட ஒரு பாட்டில் கங்கை நதி நீர் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை சுப நிகழ்ச்சிகள், தொழில் தொடங்குதல், புதுமனை புகுதல் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: