உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் சென்ற இதயம்: 250 கிமீ தூரத்தை 152 நிமிடத்தில் கடந்தது

அகமதாபாத்: இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதன்முறையாக, ஆபத்தான நிலையில் இருந்த இதய நோயாளி ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, உயிருள்ள இதயத் துடிப்புள்ள இதயம் ஒன்று சூரத்திலிருந்து அகமதாபாத்திற்கு 250 கி.மீ தூரம் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டது.

இதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் நகரச் சாலைகளில் அதிவேக பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டது. இதயத்தை சுமந்த வந்தேபாரத் ரயில் நேற்று காலை 8:58 மணிக்கு சூரத்திலிருந்து புறப்பட்டு, காலை 11:30 மணிக்கு அகமதாபாத்தை சென்றடைந்தது. அந்த இதயம் பின்னர் மருத்துவமனையில் இருந்த நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு, அவருக்குப் புதிய வாழ்வு அளிக்கப்பட்டது.

Related Stories: