புதுடெல்லி: 2025ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவால் மொத்தம் 4,840 இந்தியக் குடிமக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் மட்டும் 1,273 பேர் அடங்குவர் என்று வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
2026-ஆம் ஆண்டில், ஜனவரி 1 முதல் இன்று வரை அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 1,273 ஆகும். 2025-ஆம் ஆண்டில், மொத்தம் 3,567 இந்தியக் குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர் என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
