ஐகோர்ட் கிளை அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

 

மதுரை, ஆக. 1: ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதிட அரசு வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  இதன்படி கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக மூத்த வழக்கறிஞர் பி.சரவணன், பரதன் ஆகியோரும், அரசு பிளீடராக செந்தில், சிறப்பு பிளீடர்களாக சிவ.திலகர், பொற்கொடி, கண்னன், திருமுருகன், ஜெகநாதன், பார்த்திபன், பினேகாஷ், மகபூப் ஆதிப், கூடுதல் பிளீடர்களாக மோகன் குமார், சிவசங்கரி, சிபி சக்கரவரத்தி, தேவி சரவணபிரியா, சிவ சுப்பிரமணியன், முத்தையா, ராஜகோபலன், தீபக், தினேஷ் ஹரி சுதர்சன், வாஷிக் அலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு வழக்கறிஞர்களாக சரண்யா, சிவா, உதயகுமார், பார்த்திபன், பிரியங்கா ஜோதி, கார்த்திக் ராஜா, சைலேந்திர பாபு, இனியன் கார்த்தி, சிவ சுப்பிரமணியன், செல்வா ஆதித்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது பதவி காலம் 2 ஆண்டுகள் வரை இருக்கும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related Stories: