சாலையோரம் குப்பைகள் எரிப்பதால் புகைமண்டலம்

 

விருதுநகர், ஆக.1: விருதுநகர் அருகே சாலையில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். விருதுநகர் நான்கு வழிச்சாலையில் இருந்து புல்லாலக்கோட்டை செல்லும் சாலை உள்ளது. இதன் அருகே சிவஞானபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர் பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளிலிருந்து தூய்மை பணியாளர்கள் சேகரித்து வரும் குப்பைகளை, புல்லலக்கோட்டை சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர்.

ஊராட்சி பகுதிகளில் குப்பைகளை எரிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி, புல்லலக்கோட்டை சாலையோரத்தில் குப்பைகளை எரிப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவது உடன், துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் இந்த வழியாக டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் முகத்தை கைகளால் பொத்தி செல்வதால் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரம் குப்பைகள் எரிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: