ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நெல் வரத்து வெகுவாக குறைந்ததால் அரிசி ஆலைகளில் 50% உற்பத்தி பாதிப்படைந்தது. 26 கிலோ அரிசி மூட்டை 2 மாதங்களில் ரூ.200 வரை விலை அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் ஒரு கிலோ நெல் விலை ரூ.43 முதல் ரூ.48 வரை அதிகரித்துள்ளது. நெல் விலை அதிகரிப்பால் அரிசி ஆலைகளில் 50% அளவுக்கு உற்பத்தி பாதிப்பு என்று அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
