மதுரை, ஜூலை 31: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ரூ.1.48 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் திறப்பு நேற்று நடந்தது. மீனாட்சி கோயில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமை வகித்தார். மதுரை இந்து சமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் முத்துராமலிங்கம், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள், உதவி கமிஷனர், செயல் அலுவலரின் நேர்முக உதவியாளர்,
கண்காணிப்பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத்துறை,சோழவந்தான் மற்றும் கள்ளிக்குடி சரக ஆய்வர்கள், கோயில், வங்கி பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பேரவையினர் கலந்து கொண்டனர். உண்டியல் திறப்பின்போது ரொக்கம் ரூ.1,48,59,045, பலமாற்று பொன் இனங்கள் 295 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 980 கிராம் மற்றும் அயல் நாட்டு கரன்சி நோட்டுக்கள் 390 எண்ணிக்கையில் வரப்பெற்றுள்ளன.
