சென்னை: ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி இருந்த விவகாரத்தில் உணவு வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகி ஸ்ரீஹரி மீது ஆவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தூய்மை பணியாளர் குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தது காவல் துறை.
