சென்னை: விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் அரசை கண்டித்து தஞ்சாவூரில் வரும் 3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை தவெக அரசு வஞ்சித்துவிட்டது. நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் விஜய் போராட விட்டார். வேதனை தரும் தவெக ஆட்சி, விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
