மதுரை: பழனி கோயிலின் ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. பழனி நில மோசடி வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
