ராஜபாளையம் தொகுதியில் முறைகேடு? திறந்தவெளி சாலையோர உணவகங்கள்: ஆய்வு செய்ய கோரிக்கை

 

விருதுநகர், ஜூலை 30: ராஜபாளையம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியன் அளித்த புகாரின் பேரில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று சரிபார்க்கப்பட்டன. தமிழக சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தங்கப்பாண்டியன், தவெக சார்பில் ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் தவெக வேட்பாளரான ஜெகதீஸ்வரி வெற்றி பெற்று, தற்போது அமைச்சராக உள்ளார். இந்நிலையில் தங்கப்பாண்டியன், 14 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு காரணமாக தனக்கு வாக்கு சதவீதம் குறைந்துள்ளதாகவும், எனவே வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி பார்க்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா, வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க தனி தாசில்தாரை நியமனம் செய்தார். இதனைத்தொடர்ந்து நேற்று விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை போலீஸ் பாதுகாப்புடன் மெட்டல் டிடெக்டருடன் திறக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்டறியப்பட்டன. இந்த இயந்திரங்களை அரசியல் கட்சியினர் முன்னிலையில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து வந்திருந்த பெல் நிறுவன இன்ஜினியர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

Related Stories: