டெல்லி: தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, ‘போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? அவர்கள் மீது பெல்லட் குண்டுகளையும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசியது ஏன்? ஆயிரக்கணக்கான மாணவர்கள் காந்தியின் அகிம்சை வழியில்தான் போராடினர். தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நியாயமான முறையில் குரல் எழுப்பிய இளைஞர்களை அரசாங்கம் குற்றவாளிகளைப் போல நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.
