குடிநீர், குளிர்பானங்களை ஆய்வு செய்ய வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

சின்னமனூர், ஜூலை 27: தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் குடிநீர் பாட்டில்கள், குளிர் பானங்களை அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தற்போது கோடை காலம் போலவே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தண்ணீர் தாகம் அதிகமாவது வழகக்மாக இருக்கிறது. இந்த தாகத்தை தணிப்பதற்காக குடி தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் உள்ளிட்டவற்றை தேடிச்சென்று வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் வாங்கி குடிக்க கூடிய தண்ணீர் மற்றும் குளிர் பானங்கள் சுகாதாரமான முறையில் உள்ளதா? அதில் தயாரிப்பு தேதி உள்ளதா? காலாவதி தேதி உள்ளதா? என்று கூட பார்க்காமல் பலரும் வாங்கி குடிக்கின்றனர்.

சில சமயங்களில் காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வாங்கி குடிப்பதனால் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகிறது. சில கடைக்காரர்கள் காலாவதி ஆனாலும், அதனை விற்று லாபம் சம்பாதிப்பதிலே குறியாக உள்ளனர். இதனால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி பொதுமக்கள் தான். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி, உணவு பாதுகாப்பு துறையினர் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளில் விற்ககூடிய குளிர் பானங்கள், தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வேண்டும். இவவற்றில்ட சுகாதாரமற்ற மற்றும் காலாவதியான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்வதுடன் அது போன்ற மனித உயிர்களுக்கு உடல் உபாதைகளை விளைவிக்க கூடிய வகையில் உள்ள பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: