விளாத்திகுளம், ஜூலை 29: காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார் (54). இவர், விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். இதற்காக விளாத்திகுளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.
இந்நிலையில் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
