விளாத்திகுளத்தில் போக்சோ வழக்கில் வியாபாரி கைது

விளாத்திகுளம், ஜூலை 29: காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் குமார் (54). இவர், விளாத்திகுளம் சுப்பிரமணியபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். இதற்காக விளாத்திகுளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.

இந்நிலையில் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related Stories: