நெல்லை: முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 33-வது பட்டமளிப்பு விழாவில், முதலில் வந்தே மாதரம், தொடர்ந்து தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும், மீறினால் துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை துணை வேந்தருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்தை உலகிற்கு தந்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே அதனை மூன்றாம் தர வாழ்த்தாக மாற்ற முயற்சிக்கும் ஆளுநருக்கு துணை போவதா? தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சிறு பங்கம் ஏற்பட்டாலும் மாணவர்கள் பொங்கி எழுந்து, முதலில் பாடுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
