சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்ததாக தகவல். பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் படுகாயம். மேலும் சிலர் சிக்கியுள்ளதாக அச்சம். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்
