இலுப்பூர், ஜூலை. 23: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் மழை பெய்தது இதனால் பூமி குளிர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்திருந்த நிலையில் இலுப்பூர் பகுதியில் சில நாட்களாக மழை பெய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் அங்கங்கே சிறிய அளவில் மழை பெய்தாலும் இலுப்பூர் பகுதியில் கடந்த ஒரு வாரங்களாக மழை பெய்யவில்லை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மிகவும் அவதியூற்று வந்தனர். கோடைகால வெயிலை விட சில நாட்களாக இலுப்பூர் பகுதியில் வெப்பம் அதிகமாக இருந்தது.
