நெல்லை: நெல்லை நகர் பாறையடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவுடையப்பன் (32) மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் அருகே நடந்து சென்ற ஆவுடையப்பனை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வழிமறித்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இளைஞர் ஆவுடையப்பன் உடலை எடுக்க விடாமல் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
