ஈரோடு, ஜூன் 30: ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு 5 மையங்களில் 785 பேர் எழுதினர். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக துணைத் தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 துணை தேர்வினை தேர்வர்கள் எழுத வசதியாக ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கோபி நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை 785 பேர் எழுதினர்.
தேர்வு துவங்க சில நிமிடங்களுக்கு முன் பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான வினாத்தாள் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கட்டுகாப்பு மையத்தில் இருந்து பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிளஸ் 2 துணைத் தேர்வு ஜூலை மாதம் 7ம் தேதியுடன் நிறைவு பெறும்.
