×

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: 2 பேருக்கு பணி நியமன ஆணை

 

ஈரோடு, ஜூலை 8: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. நேற்று அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு 2025 ஆகஸ்ட் 1ம் தேதி நிலவரப்படி பணி நிரவல் மாவட்டத்துக்குள் நடந்தது.

2 ஆசிரியர்கள் மட்டும் இதில் பங்கேற்று தாங்கள் விரும்பிய பள்ளிகளில் பணி மாற்றம் பெற்று, அதற்கான பணி நியமனம் வாங்கி சென்றனர். இன்று (8ம் தேதி) அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மாவட்டத்துக்குள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வி துறையினர் செய்துள்ளனர்.

 

Tags : Erode ,Erode Primary Education Officer ,Oversight ,
× RELATED குடியிருப்புகளின் அருகே குளம் போல் தேங்கிய தொழிற்சாலை கழிவுநீர்