×

மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவது அநாகரீகம்: அமைச்சர் பெ.விஸ்வநாதன் விளக்கம்

சென்னை: மாரத்தான் போட்டியில் மயங்கி விழுந்த சிறுமிகளுக்கு முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவது அநாகரீகம் என்று அமைச்சர் பெ.விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் 56-வது பிறந்தநாள் விழா, தமிழக முதல்வர் விஜய்யகின் 52-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை மேலூரில் புகையிலை, மது, கஞ்சா போதைப் பொருட்கள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான ‘விரா” என்ற பெயரில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் 4 கி.மீ. தூரம் பங்கேற்றதால் கடும் வெயிலின் காரணமாக சிலர் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். அந்த சிறுமிகளை மனிதாபிமான உணர்வோடு தொட்டு தூக்கி மயக்கத்தை போக்குகின்ற வகையில் தண்ணீரை தெளித்து முதலுதவி செய்தேன்.

இதற்கு உள்நோக்கம் கற்பிக்கின்ற வகையில் இழிவுபடுத்தி பதிவு செய்து வருவது மிகவும் அநாகரீகமான செயலாகும். முதல்வர் விஜய் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை நடத்தி கொண்டிருப்பதை சகிக்க முடியாத சிலர் இவ்வாறு பதிவிட்டிருடப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Viswanathan ,Chennai ,Minister ,B. Viswanathan ,Minister of Higher Education of the Government of Tamil Nadu ,Fr. ,RAKULGANDHI ,
× RELATED திருவாலங்காடு – அரக்கோணம் 4 வழி...