மதுரை: வன உயிரின சரணாலய பகுதிகளில் திடக்கழிவு கொட்டுவதை தடுக்கக் கோரிய பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வனத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேகமலை, ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களில் திடக்கழிவு கொட்டுவதை தடுக்க கோரிய மனுவிற்கு நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
