×

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: 586 மனுக்கள் பெறப்பட்டது

 

பெரம்பலூர், ஜூன் 23: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா அறி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களின் மீது மூன்று மாதங்களுக்கும் மேலாக நடவடிக்கை எடுக்காத மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்களில் உடனடித்தீர்வு கண்ட அலுவலர்களை பாராட்டிய கலெக்டர் அனைத்து அலுவலர்களும் தங்கள் துறை சார்ந்த மனுக்கள் மீது எவ்வித காலதாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்பிறகு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டு மனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 586 மனுக்களை பொது மக்களிடமிருந்து கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுகொண்டனர். முன்னதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 3280 மதிப்பில் காதொலி கருவிகளை கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுந்தர்ராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் வாசுதேவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பரிமளம், தாட்கோ பொது மேலாளர் கவியரசு உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் முதல் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் காய்கறிகளை கையில் ஏந்தியபடி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலக சாலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags : Perambalur Collectorate ,Perambalur ,Collectorate ,Perambalur Collector ,Sharanya Ari ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட, வட்டார...