- அரியலூர் மாவட்டம்
- அரியலூர்
- அரியலூர் கலெக்டர்
- அரியலூர் மாவட்ட உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
- செந்துறை
- வரி தண்டலர்
- மாவட்டம்
- வருவாய்
- அதிகாரி…
அரியலூர், ஜூன் 19: அரியலூர் கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நாளை 20ம்தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
