×

அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட, வட்டார வள பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

 

அரியலூர் ஜூன் 22: அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்தி குறிப்பு :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக அடிப்படையிலான அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை முழுமையாக்கும் திட்ட பணியின் இரண்டாம் கட்ட செயல்பாடுகள் மேலும் 15 மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்கென மாநில, மாவட்ட மற்றும் வட்டார வள பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திற்கான தற்காலிக பணியிடங்கள்
மாநில வளப் பயிற்றுநர் – ஒன்று (மூன்று மாவட்டத்திற்கு ஒருவர் என பின்னர் என தேர்வு செய்யப்படுவர்). மாவட்ட வளப் பயிற்றுநர் – ஒன்று. வட்டார வளப் பயிற்றுநர் – 6 (வட்டாரத்திற்கு ஒன்று வீதம்).

Tags : Ariyalur District ,Ariyalur ,District ,Collector ,Mrinalini ,Tamil Nadu State Rural Livelihood Movement ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் 542 பேர் ஆப்சென்ட்