அரியலூர், ஜூன் 19: அரியலூர் கலெக்டர் மிருணாளினி செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்கள் வழங்கி வருகிறது. தொடர்ந்து, தற்போது தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர 18 முதல் 35 வயதிற்குள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பி.இ.மெக்கானிக்கல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள், மேலும் பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைப்பெறவுள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
