- அரியலூர் மாவட்டம்
- அரியலூர்
- மாவட்டம்
- கீழப்பழுவூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி
- அரியலூர் அரசு கலைக் கல்லூரி
- அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி
- அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி
அரியலூர், ஜூன் 22: அரியலூர் மாவட்டத்தில் நீட் மறு தேர்வை 1,650 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு கலைக்கல்லூரி, அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கரு.பொய்யூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காத்தான்குடிகாடு பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி ஆகிய 6 மையங்களில் இந்த நீட் மறு தேர்வு நேற்று நடைபெற்றது. இத்தேர்வை எழுத 2,192 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், 1650 பேர் தேர்வு எழுதினர். இதில் 195 மாணவர்கள், 347 மாணவிகள் என 542 பேர் தேர்வெழுத வரவில்லை.
