பெரம்பலூரில் 9 வயது சிறுமி கொலை வழக்கில் தாயின் கள்ளக்காதலன் கைது!

பாடாலூர்: பெரம்பலுார் மாவட்டம் பாடாலூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 9 வயது மகளை, தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த வழக்கில் பெண்ணின் கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(37) இவரது மனைவி நிஷாந்தி(26), இவர்களது மகள் கீர்த்திஷா (9). தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 5 வருடமாக குணசேகரனை பிரிந்து நிஷாந்தினி காரை சமத்துவபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

பெரம்பலூரில் உள்ள கட்டுமான தொழிலாளர் சங்க அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நிஷாந்திக்கு மணிவண்ணன் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இவர்களின் கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நிஷாந்தி கொலை செய்துவிட்டு, மகள் மூச்சு பேச்சு இல்லாமல் கிடப்பதாக கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தார்.

அவர்கள் குழந்தையை மீட்டு அருகே உள்ள காரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்திஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக கூறிவிட்டனர். மேலும் கழுத்து பகுதியில் காயம் இருந்ததால் சந்தேகத்தில், பாடாலூர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். பாடாலுார் போலீசார் கீர்த்திஷா சடலத்தை மீட்டு, பெரம்பலுார் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, நிஷாந்தியின் கணவர் குணசேகரன் கொடுத்த கொடுத்த புகாரின் பேரில் பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து, நிஷாந்தியை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் கள்ளக்காதலன் சோலைமுத்து மகன் மணிவண்ணன் (36) குழந்தையைவிட்டு பிரிந்து, தனியாக வரும்படி கூறி தொல்லை கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தையை வீட்டு வரும்படி கூறினார்.

இதனால் நிஷாந்தி குழந்தையை கொன்றதாக தெரியவந்தது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலன் மணிவண்ணனை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். அவரிடம் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: