- தேசிய மக்கள் நீதிமன்றம்
- சங்கரன்கோவில்
- சேரன்மகாதேவி
- சங்கரன்கோவில்,
- சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம்
- சங்கரன்கோவில் மாவட்ட சட்ட சேவைகள் குழு
சங்கரன்கோவில், ஜூன் 15: சங்கரன்கோவில், சேரன்மகாதேவியில் நடந்த தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 683 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. சங்கரன்கோவில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதில் சங்கரன்கோவில் சார்பு நீதிபதி மகேந்திரவர்மா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அலிமா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாரி ஆகியோர் பங்கேற்று வழக்குகளை சமரசத் தீர்வு மூலம் விரைந்து முடித்தனர்.
இதில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 490 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ. 85,64,800 மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
வீரவநல்லூர்:
சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த ேதசிய மக்கள் நீதிமன்ற முகாமிற்கு நீதிபதிகள் அருண்சங்கர், சுரேஷ்குமார் தலைமை வகித்தனர். முகாமில் 190 சிறு வழக்குகள், 3 சிவில் வழக்குகள் என 193 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் வக்கீல் சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் சந்தனகுமார், பொருளாளர் பாக்கியராஜ், அரசு வக்கீல் கருணாநிதி மற்றும் மூத்த வக்கீல்கள், இளம் வக்கீல்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
