செய்துங்கநல்லூர், ஜன. 22: செய்துங்கநல்லூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் நலச்சங்கம் சார்பில், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக செய்துங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், செய்துங்கநல்லூர் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார்.
