×

இயந்திர கோளாறு காரணமாக ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய இந்திய சரக்கு கப்பல்: மாலுமிகள் 14 பேர் மீட்பு

துபாய்: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் போர் காரணமாக மத்தியகிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியே செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்கா, ஈரான் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன் ஓமன் கடலோர பகுதியில் சென்ற எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில் ஓமன் கடற்பகுதியில் மூழ்கிய இந்திய கப்பலில் இருந்த 14 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் தளத்தில், “இந்திய கொடியுடன் கூடிய எம்எஸ்வி விராட் 1 என்ற சரக்கு கப்பல் 14 இந்தியர்களுடன் சென்றபோது, இயந்திர கோளாறு காரணமாக ஓமன் கடல்பகுதியில் மூழ்க தொடங்கியது. இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கும், இந்திய கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கப்பல் மூழ்குவதை அறிந்த அமெரிக்க கடற்படை விமானமும், கப்பலில் இருந்தவர்களை மீட்க மீட்பு படகுகளை அனுப்பியது. இந்திய கடற்படையும், அமெரிக்க படகுகளும் இணைந்து எம்எஸ்வி விராட் 1 கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்டனர் ” என தெரிவித்துள்ளது.

Tags : Oman Sea ,Dubai ,Strait of Hormuz ,Middle East ,Iran ,US ,Israel ,
× RELATED அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு...