வீட்டில் கஞ்சாசெடி வளர்த்த பரோட்டா மாஸ்டர் கைது

பண்ருட்டி: வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து, அதனை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பண்ருட்டி நகரம், பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (34) இச்செயலில் ஈடுபட்டது தெரிந்தது. இவர், பண்ருட்டியில் உள்ள பிரபல ஓட்டலில் சைனீஸ் மற்றும் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இதையடுத்து, ஆனந்தகுமார் வீட்டிற்கு சென்ற, பண்ருட்டி போலீசார் அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், அவரது வீட்டின் ஒரு பகுதியில் சுமார் 6 அடி உயரம் உள்ள 6 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த செடிகளை பறிமுதல் செய்த போலீசாரை ஆனந்தகுமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: