×

அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் வெனிசுலா போதை கடத்தல் தலைவன் பலி: அதிபர் டிரம்ப் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் வெனிசுலா தீவிரவாத குழுவின் தலைவன் ரஸ்தன்போர்ட் குரேரோ புளோரஸ் சுட்டு கொல்லப்பட்டான் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் மிக பெரிய போதை கடத்தல் கும்பலான டிரென் டி அரகுவா அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல நகரங்களில் போதை கடத்தல், ஆள் கடத்தல், கொலை மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது. அமெரிக்கா இந்த அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அறிவித்திருந்தது.

பல அமெரிக்க நகரங்களில் நடக்கும் பெரும்பாலான வன்முறை மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு டிரென் டி அராகுவாதான் காரணம் என்று டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டி வந்தது. போதை கும்பல் தலைவன் ஹெக்டர் ரஸ்தன் போர்ட் குரேரோ புளோரஸ் பற்றி தகவல் தருபவருக்கு ரூ.41 கோடி பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வெனிசுலாவில் உள்ள பொலிவர் மாகாணத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஸ்தன்போர்ட் உயிரிழந்தார். இது குறித்து அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: டிரென் டி அரகுவா தீவிரவாதிகளுக்கு வெனிசுலாவிலோ அல்லது வேறு எங்குமே இனி பாதுகாப்பான புகலிடம் இல்லை. இந்த கொடூரமான கொலைகாரர்களையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய நரகத்திற்கு அனுப்புவோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : US military ,President Trump ,Washington ,Rustanport Guerrero Flores ,United States ,Train de Aragua ,Venezuela ,Latin America ,
× RELATED பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு;...