மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,695 புள்ளிகள் அதிகரித்து 75,528 புள்ளிகளாக உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 461 புள்ளிகள் அதிகரித்து 23,623 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. ஈரான் – அமெரிக்கா சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளதாக டிரம்ப் அறிவித்தார். டிரம்ப் அறிவிப்பை அடுத்து உலகம் முழுவதும் பங்குச்சந்தைகளில் ஏற்றம். இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 2%க்கு மேல் உயர்ந்துள்ளது.
