தங்கம் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று திடீரென பவுனுக்கு ரூ.1040 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலையில் திடீர் மாற்றம் காணப்பட்டது.

அதாவது, நேற்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,600க்கும் விற்றது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் நேற்று 4வது நாளாக மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.270க்கும், பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை திடீரென அதிகரித்து உள்ளது நகை வாங்குவோருக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: