சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அதாவது நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வார தொடக்க நாளில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. நேற்று கிராமுக்கு ரூ.130 குறைந்து கிராம் ரூ.14,070க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து பவுன் ரூ.1 லட்சத்து 12,560க்கும் விற்றது. வெள்ளி விலையில் மாற்றம் ஏதுவும் இல்லை. கிராம் ரூ.270க்கும், பார் வெள்ளி ரூ.2.70 லட்சத்துக்கும் விற்றது.

இதனையடுத்து இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை 4வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனையாகிறது.

Related Stories: