தக்கலையில் கோயிலில் பூஜை பொருட்கள் திருடியவர் கைது

 

தக்கலை, ஜூன் 9: தக்கலை அருகே உள்ள புலியூர் குறிச்சி ஓணப்பாறையில் இசக்கி அம்மன் ஆலயம் உள்ளது. இதன் தலைவராக வெள்ளமடத்தை சேர்ந்த பிரேம் குமார் உள்ளார். இக்கோயிலின் கதவை உடைத்து அங்கிருந்த பித்தளையால் செய்யப்பட்ட குத்துவிளக்குகள், சூலாயுதம், கெண்டி ஆகியனவற்றை மர்ம ஆசாமி திருடி சென்றுள்ளார்.
இது தொடர்பாக பிரேம் குமார் அழகரம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திருடியிருக்கலாம் என தக்கலை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை பிடித்து விசாரித்ததில் அவர் திருடியதை ஒப்புக் கொண்டார். ேமலும் திருடிய பொருட்களை தக்கலைப்பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் விற்பனை செய்ததாக கூறினார். இதனையடுத்து திருட்டுபோன பொருட்களை போலீசார் மீட்டு, மணிகண்டனை கைது செய்தனர். திருட்டு பொருட்களை வாங்கிய ஆக்கர் வியாபாரியை எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: