நித்திரவிளை, ஜூன் 9: நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியில் உள்ள ஒரு ஸ்டேஷனரி கடையில் குட்கா புகையிலை விற்பனை செய்வதாக நித்திரவிளை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 12 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக எஸ்.ஐ. ராஜா ராபர்ட் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் கடையின் உரிமையாளர் தெருவுமுக்கு பகுதியை சேர்ந்த பிந்து குமாரி(45) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
