கிருஷ்ணராயபுரம் அருகே தாமரைக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு

கிருஷ்ணராயபுரம், ஜுன் 3: கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி பகுதியில் தாமரை பூக்குளத்தில் சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசியில் இருந்து கருப்பூர் செல்லும் சாலையில் உள்ள தாமரை பூக்குளத்தில் நேற்று காலை ஆண் ஒருவரின் உடல் மிதந்ததை கவலையாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டெடுத்தனர்.விசாரணையில் மாயனூர் காசா காலனி பகுதியை சேர்ந்த சண்முக நீதி (34). இவர் தாமரை குளத்தில் அவ்வப்போது தாமரைப் பூ பறித்து செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளார் என தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று காலை பூப்பறிக்க சென்றபோது தவறி ஆழத்தில் விழுந்து விட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லைமாயனூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இச்சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Related Stories: