கரூர், மே 25: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் வழியாக செல்லும் பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் போதிய பராமரிப்பு குறைவு காரணமாக மிகவும் மோசமான நிலையிலும், பிளாஸ்டிக் கழிவுகள் படர்ந்த நிலையிலும் உள்ளது.விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ளதால் இந்த வாய்க்காலை விரைந்து சீரமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
