கரூர், மே. 25: கரு்ர் மாவட்ட மைய நுாலகத்தில், கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ,மாணவிகளுக்கு கலை, கைவினைப் பொருட்கள் பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மைய நுாலகர் மேரிரோசரி சாந்தி வரவேற்றார். கலை மற்றும் கைவினை ஆசிரியர் லதா, குழந்தைகளுக்கு கலை, கைவினைப் பொருட்கள் பயிற்சி அளித்தார்.
இதில், பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இந்த நிகழ்வில், 100 பள்ளி மாணவ, மாணவிகள் நுாலக உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைவ ருக்கும் பரிசு வழங்கப்பட்டது. நிறைவாக நுாலகர் சுகன்யா நன்றி கூறினார்.
