கரூர் கோவை ஈரோடு சாலை பிரிவில் நிழற்குடை அமைக்க தோண்டிய பள்ளத்தால் அச்சம்

கரூர், ஜூன் 3: நிழற்குடை அமைக்க தோண்டிய பள்ளத்தால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கரூர்-கோவை- ஈரோடு சாலை பிரிவில், கரூர் மாவட்டத்திற்குட்பட்ட முனியப்பன் கோவில் அருகே பேருந்து நிழற்குடை அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால் இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கவில்லை.

இந்தப் பகுதியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடப்பதால் இந்தப் பகுதி எப்பொழுதும் பரபரப்பான சாலையாகவே காணப்படும். இதனால் தோண்டப்பட்ட குழிகள் அப்படியே கிடக்கிறது. இந்த பகுதி மக்கள் கடக்கும் போது பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் இந்த பகுதியை கடக்கும் போது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

 

Related Stories: