கோட்டைமேடு கிராமத்தில் மாடித்தோட்டம் அமைக்க பயிற்சி

குளித்தலை, ஜூன் 4: குளித்தலை அடுத்த கோட்டைமேடு கிராமத்தில் மாடித்தோட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை வட்டாரம் வேளாண்மை துறையின் கீழ் அட்மா திட்டத்தில் வைகைநல்லூர் வடக்கு கோட்டைமேடு கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் தலைமையில் மாடி தோட்ட பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் பேசுகையில், கேட் பார்ட் 2 அபியான் விளைநிலம் காப்போம் முகாமின் கீழ் ரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல், இயற்கை வளங்களை பயன்படுத்துதல், ஆரோக்கியமான உணவு பழக்கங்களைப் பற்றி பேசினார். பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடைய வேண்டும்.

விவசாயிகள் அரசு சார்ந்த மானிய திட்டங்களைப்பெற விவசாயின் நில உடமை பதிவு செய்ய வேண்டும் என்றா. பூதேரி வேளாண்மை அறிவியல் நிலையம் தோட்டக்கலை விஞ்ஞானி கவியரசு, மாடித்தோட்டம் அமைப்பது குறித்தும் மற்றும் பூச்சி நோய்கள் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கினார். பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் அட்மா திட்ட அலுவலர் செல்வவேந்திரன் நன்றி கூறினார்.

 

Related Stories: